Wednesday, September 12, 2018

பல்வேறு துறைகளில் 1136 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: தேர்வாணையம் அறிவிப்பு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1136 பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் ஆகியவற்றில் 1136 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. 130 பிரிவுகளைச் சேர்ந்த இந்தப் பணியிடங்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (சி, பி, ஈ) அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வு குறித்த தகுதி விவரம் மற்றும் இதர நிபந்தனைகள், விண்ணப்பப்படிவம் ஆகியன ஆணையத்தின் www.ssc.nic.in என்ற வலைதளத்திலும் தெற்கு மண்டல அலுவலகத்தின் www.sscsr.gov.in என்ற வலைதளத்திலும் கிடைக்கும்.

இதில் தென்மண்டலத்திற்கு மட்டும் 13 வகை பணியிடங்களில் 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்களில் 8 பட்டதாரி நிலையிலும், 4 மேல்நிலை வகுப்பு நிலையிலும், 1 மெட்ரிக் நிலையிலும் இருக்கும்.

விண்ணப்பதாரர்களில் பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பு, பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.



தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் ஆணையத்தின் www.ssconline.nic.in என்ற வலைதளத்தில் செப்டம்பர் 30ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பதிவுகளுக்கான தேர்வுகள் அக்டோபர் 27, 29, 30 தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE
Back To Top