Search This Blog

Wednesday, September 26, 2018

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் உடம்பிலிருந்து சர்க்கரை நோயை விரட்ட ! முயற்சி செய்து பாருங்கள் !

0 comments



தற்பொழுது உள்ள வாழ்க்கைச் சூழ்நிலையில் பெறும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர் .அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும் பலன் இல்லாமலும் விரும்பிய உணவை உண்ண முடியாமலும் நோயுடனே வாழ்கின்றனர் . மருத்துவமனைக்கு சென்று பல லட்சம் செலவு செய்யும் முன் இந்த எளிய மருந்தை உங்கள் வீட்டிலேயே தயாரித்து உட்கொண்டு பலன் கிடைகிறதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள மருத்துவமனை செல்லுங்களே .

வரக்கொத்துமல்லி மற்றும் வெந்தயம் உங்கள் வீட்டில் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் இந்த இரண்டு பொருளை வைத்து மருந்து தயாரித்து பயன் பெறுங்கள் .எப்படி மருந்து தயாரிப்பது என்பதை அறிய தொடர்ந்துப் படியுங்கள் .



அரை கிலோ வரக்கொத்துமல்லி , கால் கிலோ வெந்தயம் இவ்விரண்டையும் தனித்தனியாக நன்கு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் .இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து பாதியாக வற்றும் வரை காய்ச்சவும் .தற்போது நமக்கு தேவையான மருந்து தயார் .

காய்ச்சிய மருந்தை மூன்று வேளை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டும் .இதை பருகிய பின் முக்கால் மணி நேரம் தண்ணீரைத் தவிர வேறு எதையும் உண்ணக் கூடாது

இதை தவறாமல் மேற்கூரிய படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடி விடும் .ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் , பின்னும் பரிசோதனை செய்து பாருங்களே , வித்யாசம் தெரியும் .