Subscribe Us

Wednesday, October 10, 2018

தொண்டை வலி மற்றும் தொண்டை புண்ணுக்கு...


வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலியை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறைத்து நல்ல முனேற்றத்தை தரும்.



அரச மரப்பட்டையை வெட்டி எடுத்து அதன் புறனியை நீக்கி அதாவது வெளிப்புறத் தோலை சீவிவிட்டு உட்புறப் பட்டையை மட்டும் எடுத்து நன்கு துண்டாகப் பொடித்து வெயிலில் உலர்த்தி கல்லுரலில் இடித்து தூள் செய்து துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தூளை இரண்டு சிட்டிகை எடுத்து நீரில் ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி மற்றும் வீக்கம் குறையும் .

இதில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை தினமும் செய்து வர இந்து நாட்களில் பூர்ண குணமடைந்து ,தொண்டையில் உள்ள அணைத்து நோய்கள் குணமடைய உதவுகிறது .