மே தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு: உழைப்பாளர் கொதிப்பு!

உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி
விடுமுறையாக இருக்கும் நிலையில் சமீபத்தில் திரிபுராவில் ஆட்சியை பிடித்த பாஜக, மே 1ஆம் தேதி விடுமுறையை ரத்து செய்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள உழைப்பாளர் கொதித்தெழுந்துள்ளனர்.



இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் மே தின விடுமுறையை இதுவரை ரத்து செய்யாத நிலையில் திரிபுராவில் மட்டும் ரத்து செய்வது உழைப்பாளர்களுக்கு செய்யும் துரோகம் என அம்மாநில எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் மே தினத்தை மாநில பொது விடுமுறை பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும், பாஜக அரசின் இந்த செயலானது தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரானது என்றும், திரிபுரா மாநில முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மனிக் டே கூறியுள்ளார்.



Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel