Search This Blog

Thursday, December 27, 2018

ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுவது கொடுமையானது - சீமான்

0 comments






ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 120 பேர் மயக்கமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 





அரசு உத்தரவாதம் தரும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில், போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுவது கொடுமையானது என தெரிவித்தார்