ஜாக்ட்டோ ஜியோ ஒத்துழைப்பு தர வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்





அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், போராட்டம் நடத்தவுள்ளஜாக்ட்டோ ஜியோ அமைப்பினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



அறிவியலில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேரை பின்லாந்துக்கு, கல்வி மற்றும் அறிவியல் சுற்றுலாவுக்காக்கஅனுப்பும்நிகழ்ச்சிசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்,எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைப்பதாக தெரிவித்தார்.



ஜாக்ட்டோ ஜியோ அமைப்பு நாளை போராட்டம் நடத்த உள்ளதாகதெரிவித்துள்ளநிலையில், அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here
Share:

Categories