வேலைநிறுத்தம் தொடர்ந்தால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் நடத்த வேண்டும் பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை

பள்ளிக்கல்வி துறை நாகப்பட்டினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதேபோல், அந்த பகுதி அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-



தற்போது நடைபெற்று வரும் ஆசிரியர் சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டங்களால் பள்ளி செயல்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடராமல் 23-ந் தேதி (இன்று) முதல் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அருகாமையில் உள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் மெட்ரிக், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை தற்காலிகமாக ஈடுபடுத்தி பள்ளியினை நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது



கல்வி சார்ந்த விவரங்களை உடனுக்குடன் அறிய இணைந்திடுவீர்

Join Our WhatsApp Group Click Here

Join Our Facebook Page Click Here
Share:

Categories