Breaking

Monday, February 4, 2019

42 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள முதன்மை கல்வி அலுவலர் ; வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு



வேலூர்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகள் நவீனமாக்கப்பட்டு கொண்டு வருகின்றன. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 227 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 444 நர்சரி மற்றும் ஆரம்ப நிலை பள்ளிகள், 41 மழலையர் பள்ளிகள் செயல்பட்டு கொண்டு வருகின்றன.



இவற்றில் 42 மெட்ரிக் பள்ளிகள் தற்காலிக அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் உள்ளன. அந்த பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் அந்த அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.