சென்னை: தொடக்க கல்வி துறையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏற்கனவே 535 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், எண்ணிக்கை 577 ஆக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில் 609 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர், தற்போது இரு துறைகளிலும் சேர்த்து 1186 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


