Breaking

Monday, February 4, 2019

மழையில் நனைந்தால் சளிப் பிடித்துவிடும் என்பது சரியா ?


மழை நீரில் நனைந்தால் சளிப் பிடிக்கும் என்பது தவறானது. ஜலதோஷம் வைரஸ் என்ற நச்சுக் கிருமியால் உண்டாகிறது. இது ஒரு தொற்றுநோய்.
எளிதில் அடுத்தவர்களுக்குப் பரவிவிடும். இந்த வைரஸ் கிருமி சுவாசப்பைகளில் ஏற்கெனவே இருக்கும்.



குளிரான காலநிலையில் ரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன, அப்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.  இதனால் வைரஸ் கிருமி அதிகமாகப் பெருகி நோயை உண்டு பண்ணிவிடுகிறது. அதனால்தான் மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும் என்று கூறுகிறோம் .