Wednesday, February 27, 2019

PGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க நீதிமன்றம் பல தீர்ப்புகள் மூலம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் - மனவேதனையில் தேர்வர்கள்!

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வினாத்தாளில் தவறாக வினாக்களும் , பொருந்தாத விடைகள் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிராக ‌மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய வினாக்களுக்கு

ஆறு மதிப்பெண் வழங்கியது மேலும் இதுபோன்ற வழக்குகள் சென்னையில் நீதிமன்றத்தில் முடிந்த பின்பும் பணி நியமனம் செய்யவில்லை.இதனால் இரண்டு வருடமாக பாதிக்கப்பட்ட தேர்வர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.