கடலூர்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் 8-ஆம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான தகுதித் தேர்வு வருகிற ஜூன் 1, 2-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 7-ஆம் வகுப்பு தேறிய அல்லது படித்துக்கொண்டிருக்கும் பதினொன்று அரை முதல் 13 வயது வரை உள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித் தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். தனிநபர் விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் விரைவுத் தபாலில் பெற ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.555 வீதம் சாதிச் சான்றுடன் அனுப்பி விண்ணப்பப் படிவம், முந்தைய ஆண்டுத் தேர்வுகளின் விடைத் தாள்களையும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாத இறுதிக்குள் சென்றடைய வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி நிதி உதவியாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் கூடுதல் விவரங்களை ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணைய தள முகவரி மூலம் அறிந்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் 8-ஆம் வகுப்புக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான தகுதித் தேர்வு வருகிற ஜூன் 1, 2-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 7-ஆம் வகுப்பு தேறிய அல்லது படித்துக்கொண்டிருக்கும் பதினொன்று அரை முதல் 13 வயது வரை உள்ள மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித் தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். தனிநபர் விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினர் விரைவுத் தபாலில் பெற ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.555 வீதம் சாதிச் சான்றுடன் அனுப்பி விண்ணப்பப் படிவம், முந்தைய ஆண்டுத் தேர்வுகளின் விடைத் தாள்களையும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாத இறுதிக்குள் சென்றடைய வேண்டும்.
எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே நடைபெறும். தேர்ச்சி பெறுவோருக்கு கல்வி நிதி உதவியாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் கூடுதல் விவரங்களை ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணைய தள முகவரி மூலம் அறிந்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்





