JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, March 26, 2019

ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் என்றும், வேறு பணிகளுக்கு மாற்றம் செய்ய முடியாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.



ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை தடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.



விசாரணை முடிவில் இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், ஒன்றிய அளவில் பின்பற்றப்படும் இந்த பணி நியமனம், மாநில அளவில் மாற்றும் பொழுது உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும் என கூறி, வழக்கை வருகிற வியாழக்கிழமையன்று ஒத்தி வைத்தனர்.