Subscribe Us

Tuesday, April 16, 2019

ஏப்.18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும்


தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பொதுமக்கள் ஏதுவாக வாக்களிக்க தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.


இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்கவேண்டுமென, தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு விடுமுறை தர தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Popular Feed