JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, April 24, 2019

கோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

கோடை விடுமுறையில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புதிய மாணவர் சேர்க்கை மறு தேர்வு உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளது. அலுவல் நாட்கள் தவிர வேறு நாட்களில் விடுப்பு தேவைப்பட்டால் வட்டாரக்கல்வி அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.