கழிவுநீர்த் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்? இதைத் தடுக்க இயலாதா, ?


கழிவுநீர்த் தொட்டியில் ஹைட்ரஜன் சல்ஃபைடு, மீத்தேன், கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேறும். ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு மட்டும் இருந்தால் அழுகிய முட்டை போன்று நாற்றமடிக்கும். கண்களில் எரிச்சல் உண்டாகும். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். பதற்றம், தலைவலி போன்றவையும் உண்டாகும். இந்த ஹைட்ரஜன் சல்ஃபைடுடன் கார்பன் மோனாக்ஸைடும் மீத்தேனும் சேரும்போது மனிதர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.



கழிவுநீர்த் தொட்டி, பாதாளச் சாக்கடை போன்றவற்றைச் சுத்தம் செய்யும்போது, மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது என்றும் இயந்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம், 2014-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்துள்ளது.



ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் கழிவுநீர்த் தொட்டிகளில் மனிதர்களை இறக்குவதால், கிடைப்பதற்கு அரிய மனித உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன. சட்டம் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் கூடுதல் அக்கறை இல்லாததே இந்தத் துயங்களுக்குக் காரணம். அரசாங்கம் முயற்சி செய்தால் மனிதர்கள் பலியாவதைத் தடுக்க முடியும்,
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel