JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, April 21, 2019

மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்வின் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும், வழிகாட்டுதலை, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.

விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு மட்டும், 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, தலா, 205 ரூபாயும் செலுத்த வேண்டும். மாணவர்கள் படித்த பள்ளிகள் வழியாகவும்; தனி தேர்வர்கள், தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். நாளை முதல், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.