Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 16, 2019

பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்றும், நாளையும் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்றும், நாளையும் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 1 வகுப்புக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண் ணப்பிக்க தவறிய தனித்தேர்வர் கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) இன்றும் (மே 16), நாளையும் (மே17) 2 நாட்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இதற்கு தனித்தேர்வர்கள் கட்டண மாக ரூ.1,135 செலுத்த வேண்டும். பதிவு செய்த பின்னர் தரப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

ஏனெனில், அதிலுள்ள விண் ணப்ப எண் கொண்டுதான் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும். கூடுதல் விவரங் களை தேர்வுத்துறை www.dge.tn.gov.in இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.