அரசு ஊழியர்களுக்கு இனி 5 நாள் மட்டுமே பணி


சிக்கிம் மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்ற பி.எஸ். கோலே, மாநில அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்று அறிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற நிலைபாடு உள்ளது.
இதனை 5 நாட்கள் என குறைக்கப்படும் என்ற தங்களது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்தார் கோலே.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார். இதன் முலம் அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும். இதை அவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் உடல் நலத்தைக் கவனிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share:

Total Pageviews

Categories