Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 18, 2019

8,462 ஆசிரியர்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் உள்ளிட்ட தற்காலிகப் பணியிடங்களில் பணிபுரியும் 8,462 நிரந்தர ஆசிரியர்களுக்கு பணி தொடர் நீட்டிப்பு ஆணையை நிரந்தரமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:



பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிகப் பணியிடங்கள் பத்து ஆண்டுகள் கடந்தும் நிரந்தரமாக்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் தொடர்பணி நீட்டிப்பு ஆணைக்காக காத்திருந்து சம்பளம் பட்டியல் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போதுகூட 8,462 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக அரசாணை 193-இன்படி நியமனம் செய்யப்பட்ட 1,282 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்திற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்படவில்லை.


இதுபோன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், ஒவ்வொரு முறையும் பணி செய்ததற்கான சம்பளம் பெறுவதற்கே மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாதந்தோறும் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை என்பதை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.