சென்னை: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுநிலை மற்றும் எம்.பில்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக மே 20-ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.
தமிழ் முதுநிலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வரும் 20-ஆம் தேதியிலிருந்து ஜூன் 12 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 12-க்குள் வழங்க வேண்டும். இதையடுத்து ஜூன் 19-இல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 2254 2992, 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முதுநிலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். வரும் 20-ஆம் தேதியிலிருந்து ஜூன் 12 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 12-க்குள் வழங்க வேண்டும். இதையடுத்து ஜூன் 19-இல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 2254 2992, 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்துள்ளார்.


