Search This Blog

Friday, June 7, 2019

10ம் வகுப்பு துணைத் தேர்வு தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு.

0 comments
மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வராத, தேர்ச்சி பெறாமல் தற்போது நடக்க உள்ள துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து, அறிவியல் பாடத்தின் செய்முறைத் தேர்வுக்கு வராதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், தனித் தேர்வர்கள், நேரடியாக துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடக்கும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பான முழு விவரங்களை சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர்களிடம் நேரில் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்.