Breaking

Saturday, June 15, 2019

சட்ட படிப்புக்கு வரும், 17 முதல் அட்மிஷன்



சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு படிப்புக்கு, வரும், 17ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, சீர்மிகு சட்ட கல்லுாரியில், ஐந்தாண்டு சட்ட படிப்புக்கு, 2,807 பேர் விண்ணப்பித்தனர்.

அவர்களில், 2,423 பேர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தரவரிசையின் படி, வரும், 17ம் தேதி முதல், கவுன்சிலிங் துவங்க உள்ளது.'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல், சட்ட பல்கலையின், https://tndalu.ac.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.