Sunday, June 23, 2019

கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வு, இன்று நடைபெறுகிறது.

கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 30 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.அரசு பள்ளிகளில், 814 முதுநிலை கணினி ஆசிரியர் பதவிகளை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், இன்று போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில், 23 ஆயிரத்து, 287 பெண்கள்; 322 மாற்று திறனாளிகள் உள்பட, 30 ஆயிரத்து, 833 பேர் பங்கேற்கின்றனர்.
இந்த தேர்வுக்கான கட்டுப்பாடுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.