ஆக. 27-இல் பாரத சாரண-சாரணியர் மாநாடு தொடக்கம்

பாரத சாரண-சாரணியர் மாநில மாநாடு 22 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் வரும் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: சாரண-சாரணியர் பத்தாவது மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 27-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்து பேசவுள்ளார் என்றனர்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel