Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 20, 2019

தொலைநிலை கல்வி சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் 94 உதவி மையங்கள் மூலமாகவும், ஆன்-லைனிலும் மாணவர் சேர்க்கை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.