Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 22, 2019

கூட்டுறவு வங்கியில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசி




வேலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடைய தகுதியான ஆண், பெண் விண்ணப்பத்தாரர்களிடம் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 60

சம்பளம்: மாதம் ரூ.16,000 - 54,000

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதைகள் பிரிவு விண்ணப்பத்தாரர்களுக்கு வயதுவரம்பு கிடையாது.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.12.2019

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.drbvellore.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.drbvellore.net/recruitment/admin/images/Vellore_DRB_Advertisement%20%20UCCS_PACS124688_1567691798.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2019

No comments:

Post a Comment