Search This Blog

Sunday, September 29, 2019

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த நாசா

0 comments


வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் மைக்ரோசிப்பில் பெயர் பொறிக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்னுமாறு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. இந்த மைக்ரோசிப் செவ்வாய் கிரகம் 2020 ரோவரில் வைக்கப்படும். பெயர்களை கீழகண்ட வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக்கலாம்.

https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020



சமர்ப்பிக்கப்பட்ட பெயர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கதிரை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களைக் பதிவு செய்யும். இதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர். ரோவர் 2020 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இது பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.