JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 17, 2019

வங்கி கிளார்க் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இன்ஸ்ட்டிட்டியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (IBPS) எனப்படும் ஐபீபிஎஸ் தேர்வாணையம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கிளார்க் பணியாளர்களுக்கான 12,075 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மாநிலத்திற்கு 1379 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு இருக்கிறது. எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மைத் தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 160 நிமிடங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து நேர்முகத்தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வில் மாநில வாரியாகவும் யூனியன் பிரதேசம் வாரியாகவும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். செய்யப்படவுள்ளது. தகுதியுள்ள நபர்கள் எந்த மாநிலத்தின் காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.


sc\st பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 என்றும் இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
ஐபிபிஎஸ் கிளார்க் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இன்று முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வு குறித்து மேலும் விபரங்களுக்கு ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்

No comments:

Post a Comment