Search This Blog

Saturday, October 19, 2019

திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு

0 comments

திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடம்:

ஓட்டுனர்

கல்வித் தகுதி:

8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி:

இலகுரக அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். கூடவே இலகுரக வாகனம் எனில் 3 ஆண்டுகல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், கனரக வாகனம் எனில் குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:



01.09.2019 அன்று 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

ஊதியம் :

ரூ. 10,000 ஒப்பந்த ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை :

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பம், மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்கள் அனைத்தும் இணைத்து பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2019/10/2019101729.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி :

மண்டலப்பயிற்சி இணை இயக்குநர்,
மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம் (முதல்தளம்),
அரசு பல்துறை கட்டிட வளாகம்,
காஜாமலை, திருச்சி - 20

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2019