Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 2, 2019

காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு.



தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வு, செப்., 23ல் முடிந்தது. இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும், விடுமுறை அளிக்கப்பட்டது.


ஒன்பது நாட்கள் விடுமுறை, இன்று நிறைவு பெறுகிறது. நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 'ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து மாணவர்களும் விடுப்பு எடுக்காமல், பள்ளிகளுக்கு வர வேண்டும்' என, பள்ளிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தனியார் பள்ளிகள், மாணவர்களின் பெற்றோருக்கு, எஸ்.எம்.எஸ்., வாயிலாக, 'மாணவர்கள், நாளை பள்ளிகளுக்கு கட்டாயம் வர வேண்டும்' என,தெரிவித்துள்ளன.