Breaking

Wednesday, October 2, 2019

பிளஸ்டூ படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை



இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் பி மற்றும் குரூப் டி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

Group 'C' Level 2 பிரிவில் 02 பணியிடங்களும், Erstwhile Group 'D' Level-1 பிரிவில் 06 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

பிளஸ்டூ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ, ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.



வயதுவரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பித்ததை பிரிண்ட் அவுட் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/10/1/SECR-Recruitment-2019-08-Group-C-D-Posts.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2019