JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, November 14, 2019

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்


கேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.




சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறினார்.