JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, November 5, 2019

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு.

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் , அது தொடர்பான உரிய பயிற்சிகள் வழங்க ஈரோடு மாவட்ட CEO உத்தரவு.
கல்வியாண்டின் இறுதியில் நடைபெறும் இத்தேர்வில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவப்பாட புத்தகத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதால் மூன்று பருவப் பாடக் கருத்துகளையும் அவ்வப்போது சிறுதேர்வுகள், செயல்தாள்கள் மூலம் மீள்பார்வை செய்திட சார்ந்த ஆசிரியர்களை அறிவுறுத்திட வட்டாரக் கல்வி அலுவலர்கள் / குறுவளமைய தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.