Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 10, 2019

இனி இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி கிடையாது -வெளியான அறிவிப்பு


2017, 2018-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .அந்த வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் இலவச மடிக்கணினி திட்டம்.தற்போது இந்த திட்டம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இது குறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,2017, 2018-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் பள்ளி படிப்பை கைவிட்டவர்களுக்கு இலவச மடிக்கணினி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.