Saturday, November 23, 2019

TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா? முழு விபரம் உள்ளே!


தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெறவுள்ள குரூப் 2 தோவிற்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-




தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப் 2 தோவு வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தோவிற்கான தகுதிகள், வயது வரம்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இதனிடையே, இத்தோவில் பங்கேற்க உள்ள தஞ்சாவூா் மாவட்ட இளைஞர்களுக்காக தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.




திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த இளைஞா்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.