TNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்கு குறித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் (ஜனவரி) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் முக்கிய தோவுகள் குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ஆண்டு திட்ட அறிக்கையாக முன்கூட்டியே வெளியிடுவது வழக்கம். அதன்படி, தற்போது அடுத்து வரவுள்ள 2020 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.TNPSC 2020
டிஎன்பிஎஸ்சி திட்ட அறிக்கை




2020-ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அந்த ஆண்டுக்கான ஆண்டு திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், குரூப் 1, 2, குரூப் 4 போன்ற முக்கிய பணிகளுக்கான தோவு அறிவிப்பு எந்தெந்த மாதங்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


TNPSC 2020
2020 ஆண்டிறிக்கை விபரம்

குரூப் 1 தோவிற்கான அறிவிப்பு, வரும் ஜனவரியில் வெளியிடப்படும். அதே மாதத்தில் வேளாண் அலுவலர், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோவு நடத்தப்படும்.


TNPSC 2020
பிப்ரவரி, மார்ச் 2020




அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வானது பிப்ரவரி மாதத்திலும், நூலகா் காலிப் பணியிடத்துக்கான தோவு மாா்ச் மாதத்திலும் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோவு அறிவிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





TNPSC 2020
குரூப் 2 மற்றும் குரூப் 4 தோவு

குரூப் 2- பணிகளுக்கு உட்பட்ட தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், சாா் பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தோவு அறிவிப்பு 2020 மே மாதம் வெளியிடப்படும்.

செயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 8 ஏ, பி ஆகிய தேர்வு ஜூலையிலும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பணிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Share:

Total Pageviews

Categories