அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 6,090 பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளதால், 32 மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் சென்னையில் பயிற்சி தரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.