Saturday, February 22, 2020

அரசு பள்ளிகளில் ஐ.ஐ.டி., மூலம் ஆய்வகம்!

சென்னை ஐ.ஐ.டி., சார்பில், அரசு உயர்நிலை பள்ளிகளில், ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. 2018 முதல், 20 அரசு உயர்நிலை பள்ளி களில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக, 15 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்க உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யில், எம்.எஸ்., - எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், இந்த ஆய்வகங்களுக்கு சென்று, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.