Monday, March 9, 2020

முதுநிலை மருத்துவ படிப்பு நாளை வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு மொத்தம் 181 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்பிட சென்டாக் சார்பில் கடந்த 26ம் தேதி முதல் கடந்த 6ம் தேதிவரை ஆன்லைனில் ( www.centacpuducherry.in) விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்நிலையில் சென்டாக் நிர்வாகம், முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நாளை 10ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்துள்ளது. முதல் கட்ட கலந்தாய்வு வரும் 25ம் தேதியும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 20ம் தேதியும், 'மாப் அப்' கவுன்சிலிங் மே மாதம் 5ம் தேதி நடக்கிறது.

No comments:

Post a Comment