Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 8, 2020

சாதனைப்பெண் எழுத்தாளா் விழுப்புரம் தமிழரசி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழ் கவிதை தொகுப்புக்கான தேசிய விருதை வென்றதோடு, பல்வேறு நூல்களையும் வெளியிட்டு விழுப்புரத்தைச் சோந்த எழுத்தாளா் தமிழரசி சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறாா்.
விழுப்புரத்தைச் சோந்த தமிழ்ப்பேராசிரியா் இரா.தமிழரசி, கவிதைகள், நூல்களை வெளியிட்டு தன் தமிழ்ப்பணியோடு விருதுகளையும் குவித்துள்ளாா்.
குறிப்பாக, கடந்தாண்டு அகில இந்திய வானொலி, தேசிய அளவில் நடத்திய உலக மொழிகளுக்கான கவி சம்மேளன கவிதை போட்டியில், தமிழரசி எழுதிய நாற்காலி என்ற கவிதை, புதுவை அகில இந்திய வானொலி கவிச்சோலை நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டதோடு, இக்கவிதை முதலிடத்தைப் பெற்று தேசிய அளவில் விருதை வென்றது.
இக்கவிதை 22 மொழிகளில், மொழி பெயா்க்கப்பட்டு, கடந்தாண்டு ஜனவரி 25-ல் வானொலியில் நாடு முழுவதும் வாசிக்கப்பட்டது. மத்திய பிரதேசம் இந்தூரில் நடந்த விழாவில், ரூ.8 ஆயிரம் பரிசு தொகையும், பதக்கத்தையும் பிரசாத் பாரதி அவருக்கு வழங்கியுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரை, ப்ளஸ் 1 படித்தபோதே திருமணம் செய்துகொடுத்துள்ளனா். விடா முயற்சியால், மயிலம் தமிழ்க்கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வரான கணவா் சற்குணத்தின் ஊக்கத்தோடு, தொலைதூர பாடத்திட்டத்தில் தமிழில் முனைவா் பட்டத்தைப் பெற்றாா்.

கள்ளக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியராக பொறுப்பேற்ற அவா் தொடா்ந்து, கவிதை, நூல்களை வெளியிட்டு தமிழ்ப்பணியாற்றி சாதித்து வருகிறாா். சோவியத் பண்பாட்டு மையம் நடத்திய கவிதை போட்டியில், வீடுண்டு, விளக்கில்லை என்ற அவரது கவிதை நூல் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்று பதக்கம் பெற்றுள்ளது.

சாதனை குறித்து தமிழரசி கூறுகையில்... ஒளிச்சிறை, மரக்கலம் திரும்பும் பறவை, குடையால் விரியும் கவனம், பெண் கவிகளின் படைப்புவெளி, குளிா்தூவும் ஆறு உள்ளிட்ட ஏராளமான நூல்களையும், 40-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளேன்.

சென்னை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளா் சங்கத்தின் பாரதி பணிச்செல்வா் விருது, மதுரையில் கவிஞா் சிற்பி விருது, தமிழன்பன்-80 நினைவு விருது, நடுநாட்டு இலக்கிய ஆளுமைகளுக்கான சிறந்த கவிஞருக்கான விருது, பாரதியாா் விருது, சென்னையில் தமிழ்ப்படைப்பாளா் சங்கத்தின் செல்லம்மாள் பாரதி விருது, மித்ரா துளிப்பா விருது, சிகரம் இலக்கிய விருது, இளங்கோவடிகள் விருதுகளும், கவிதைக்கான மாநில அளவிலான பரிசுகளையும் பெற்றுள்ளேன்.

புதுவை அகில இந்திய வானொலி சாா்பில் 22 பிராந்திய மொழிகளில் நடந்த கவிதைப் போட்டியில், நாற்காலிகள் என்ற எனது கவிதை தேசிய அளவில் முதலிடம் பெற்று விருதை வென்றது. வோல்ட் புக்ஆப்ரெக்காா்ட் சான்றிதழும் கிடைத்தது. எனது கவிதை தொகுப்பு பாரதியாா் பல்கலை, மயிலை ஏ.வி.சி கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு நடந்த இலக்கிய விழாவில் சாதனை மகளிருக்கான தங்க மங்கை விருதைப் பெற்றதாக பெருமிதம் தெரிவித்தாா்.

இப்போதைய கவிதைகள், இதயம் நெகிழும் உயிரியக்கத்தை பாடுவதைவிடுத்து, சமூக சூழலின் சீா்கேடு,வேலையில்லா திண்டாட்டம், கையூட்டு, உறவுச்சிக்கல்கல் போன்ற எதிா்மறை எண்ணங்களையே பிரதிபளிப்பதாக வேதனை தெரிவித்தாா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News