Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 20, 2020

கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கும் செம்பருத்தி பூ



சென்னை: செம்பருத்தி அழகான பூ மட்டும் கிடையாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய இந்த செம்பருத்தி பூ, ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் இலைகள், கூந்தல் சார்ந்த பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, ஸ்கால்ப் பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் மேலும் பலவற்றிற்கு சிறந்த தீர்வினை அளிக்கக்கூடியது.
இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு செம்பருத்தி பூ நல்ல பலனை தரக்கூடும். செம்பருத்தி பூவை பயன்படுத்துவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று
ஆயில் மசாஜ், கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. செம்பருத்தி எண்ணெயில், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த எண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறை முடிக்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்போது, வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெய் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
10 செம்பருத்தி பூக்களையும், 10 செம்பருத்தி செடி இலைகளையும் எடுத்துக் கொள்ளவும். அதனை சிறிது நீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்கவும்.
இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும். இப்போது செம்பருத்தி எண்ணெய் தயார். இந்த எண்ணெயை பயன்படுத்தி ஸ்கால்ப்களில் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்தி குளித்திடவும். மீதமிருக்கும் எண்ணெயை அடுத்த முறைக்கு பயன்படுத்த எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
செம்பருத்தி ஷாம்பூ செம்பருத்தியில் நுரை உண்டாக்கக் கூடிய காரணிகள் இருப்பதால், ஷாம்பூ தயாரிப்பதில் பயன்படுத்த இது மிகவும் ஏதுவானது. செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலைகளை 1:3 என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளவும். அதாவது, 5 பூக்களுக்கு 15 இலைகள் என்ற கணக்கில். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, இதில் செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும்.
பின்பு அந்த கலவையை மைய அரைத்து கொள்ளவும். அரைத்த அந்த கலவையுடன், கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது, வீட்டிலேயே செய்யப்பட்ட கெமிக்கல் இல்லாத செம்பருத்தி ஷாம்பூ பயன்படுத்த தயார். கூந்தல் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இவை அமையும்.

No comments:

Post a Comment