Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 9, 2020

பத்தாம் வகுப்பு மதிப்பெண் மாதிரி கணக்கீடு


பொதுவாக 11ம் வகுப்பில் சேர வேண்டும் என்றால் 10ம் வகுப்பு மார்க் அடிப்படையில் மட்டுமே பாடப்பிரிவுகளை எடுக்க முடியும். அதாவது கணினி எடுக்க வேண்டுமா, காமர்ஸ் எடுக்க வேண்டுமா, அல்லது உயிரியல் எடுக்க வேண்டுமா என்பதை 10ம் வகுப்பு பொது தேர்வின் இறுதி மார்க்கை வைத்து மட்டுமே முடிவு செய்ய முடியும். ஆனால் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் மாணவர்கள் எப்படி 11ம் வகுப்பில் சேர்வார்கள் என்று குழப்பம் ஏற்பட்டது.

தீர்வு என்ன

இந்த நிலையில் இதற்கும் தமிழக அரசு தீர்வு சொல்லி இருக்கிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண் எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அதோடு அவர்களுக்கு ஒரு இறுதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண் வழங்கப்படும்.

செம முடிவு

அதாவது வகுப்பில் காலாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 40% மதிப்பெண் எடுக்கப்படும். அரையாண்டு தேர்வில் இருந்து 40% மதிப்பெண் எடுக்கப்படும். மேலும் வருகைப்பதிவேடு அடிப்படையில் 20% மதிப்பெண் எடுக்கப்படும். இதன் மூலம் 100% மதிப்பெண் கணக்கிடப்பட்டு இறுதி மார்க் சீட் வழங்கப்படும். இந்த மார்க் மூலம் மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment