Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 23, 2020

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசே முடிவெடுக்கும்: சுகாதாரத் துறைச் செயலா்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சென்னை: நீட் தேர்வை ஒத்திவைப்பதா அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்கும் என்று சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். அதில் தமிழகத்தின் பங்கு எதுவும் இல்லை என்றும் அவா் கூறினாா்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த அவகாச காலத்துக்குள் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்தனா். இதனிடையே கரோனா பாதிப்பு காரணமாக நீட் தேர்வு ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, அத்தேர்வு ஜூலை 26-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் உள்ளிட்ட இடங்களிலும், நாடு முழுவதும் 154 நகரங்களிலும் அத்தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் மத்திய அரசுக்கு ஏதேனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டனவா எனக் கேட்டதற்கு சுகாதாரத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

நீட் தேர்வு குறித்து தன்னிச்சையாகவோ, தனிப்பட்ட முறையிலோ கருத்து தெரிவிக்க இயலாது. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் தான் உரிய முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தைப் போன்றே மகாராஷ்டிரத்திலும், தில்லியிலும் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. எனவே, அதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News