தமிழத்தில் தற்போது கொரோனாவால் பெண்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 1,974 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,974 பேர்களில் 1,415 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் பெண்களைவிட ஆண்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெண்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஆம், பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் சதவீதம் தற்போது 38 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Monday, June 15, 2020
பெண்கள் மீதும் கண் வைத்த கொரோனா!!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment