Search This Blog
Sunday, June 14, 2020
அரசு துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில், பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி, காஞ்சிபுரம் அண்ணா லயன்ஸ் சங்கம், பசுமை தேடி, காஞ்சி தன்னார்வலர்கள் குழு, பசுமை கூடாரம், மகிழம் குழுமம் உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்பு இணைந்து, மரக்கன்று நடும் விழாவை, நேற்று முன்தினம் நடத்தின. இதில், மஹாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுடன், தன்னார்வலர்களும் பங்கேற்று, மா, நெல்லி, புங்கை, வேம்பு, பூவரசு, பலா, மாதுளை, 20 வகையான பழம் மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)