Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 8, 2020

ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்குவர வேண்டும் கல்வித்துறை உத்தரவு!


கல்வித்துறை சார்பில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும்போது 8-ந்தேதி முதல்(இன்று) மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பெற்றுள்ள 2 முக கவசங்களை வழங்க வேண்டும். 3-வது முக கவசம் வருகிற 19-ந்தேதி வழங்க வேண்டும். பொதுத்தேர்வு மைய பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பு நிலை ஆசிரியர்கள் 8-ந்தேதி (இன்று) முதல் பள்ளிக்கு வர வேண்டும். மொத்த மாணவர்களின் எண்ணிக்கையும் 8-ந்தேதி ஹால்டிக்கெட் பெற்று சென்ற மாணவர்களின் எண்ணிக்கையையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment