Join THAMIZHKADAL WhatsApp Groups
வணக்கம்.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் சிறப்பாசிரியர்களுக்கு( ஓவியம், உடற்கல்வி , தையல், இசை) ஆகிய நான்குதுறையினருக்கு கடந்த 23.09.2017 ல்ஆசிரியர் தேர்வுவாரியம் போட்டி தேர்வை நடத்தியது இதில் ஓவிய துறையில் 327 இடங்களில் 80சதவீதம் 240 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6 மாதம் ஆகி இருக்கிறது மீதம் உள்ள 20சதவீதம் உள்ள தமிழ்வழி இட ஓதுகீடு மற்றும் சமுக நல துறை, மாநகராட்சிகளில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வழக்கு காரணமாக தாமதமகிகொண்டு இருந்தது இருந்தாலும் அரசு தரப்பு (trb)மேல் முறையீடு செய்து வழக்கு வெற்றி பெற்றபிறகுசட்ட சபையில் தமிழ் வழி இட ஓதுகீடுக்கு தனிமசோதா (Go)கொண்டு வந்தற்கும் தமிழக முதல்மைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் தங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துகொள்கிறோம். வழக்கு முடிந்த சில நாட்களில் பணிஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது கொரனாவால் மேலும் தாமதமாக ஆகிகொண்டு இருக்கிறது ஐயாதேர்வு எழுதி 3ஆண்டுகளை நெருங்கிய நிலையில்மிகுந்த மனஉளைச்சலுடனும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறோம். ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ( சமுக நல துறை, மாநகராட்சி) மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீடு, ஓவிய ஆசிரியர்கள் தையல் ஆசிரியர்கள் ஆகியோர் காத்துகொண்டு இருக்கிறோம் எனவே ஐயா தாங்கள் எங்களுக்கு விரைவில் பணி ஆனை வழங்கி எங்கள் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகிறோம்.எங்களை போலவே உடற்கல்வி ஆசிரியர்களும் பணிஆணை பெற காத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே பணிஆனைக்காக 3ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு நல்லது செய்ய வேண்டுகிறோம் அய்யா.
நன்றி ஐயா
No comments:
Post a Comment