Subscribe Us

Wednesday, July 22, 2020

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10ஆம் வகுப்பு முடிவுகள் .!!


கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

அமைச்சர் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு மார்க் சீட்டை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . 1-9ஆம் ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் கருத்து கேட்ட பின் பாட புத்தகம் வழங்கப்படும். கொரோனா தொற்று குறைந்தவுடன் பள்ளி திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார்.

No comments:

Post a Comment

Popular Feed