Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் முழுவதும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யவேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன் எத்தனை மதிப்பெண் எடுத்திருந்தாலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடையச் செய்யப்படுவார்கள் என ஏற்கனவே அரசு அறிவித்தது.
No comments:
Post a Comment